Friday, May 24, 2024

குடை என்கிற குறும்படம்

# குடை # 




 வன்னியின் இடப்பெயர்வுக்கு பின்னரான மக்களின் பொருளாதார நிலையை எடுத்தியம்பும் கொட்டகை அமைப்பிலான வீடமைப்பு. கிடுகினால் வேயப்பட்டு அதன் உக்கல் தாங்க முடியாமல் நீலக்கலர் இலவச தறப்பாலினால் வேயப்பட்ட அந்த குடிலுக்குள் இருந்து காட்சி விரிகிறது.

 வெளியே மழை பெய்து கொண்டிருப்பதற்கான பின்னணி சத்தத்துடன் ஆரம்பிக்கும் முதல் காட்சி, தறப்பால் கிடுகையும் தாண்டி ஆங்காங்கே ஒழுகும் மழை நீரை, சாணத்தினால் மெழுகப்பட்ட மண்நிலம் சந்திரன் மேற்பரப்பு போல் ஆகி விடாமல் இருக்க சமையல் பாத்திரங்கள் போராடிக் கொண்டிருக்கும் பின்னணிக் கதை சொல்லும் குளோசப் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது. 

 35 வயது மதிக்கத்தக்க அடுப்பு வெக்கையில் நெற்றி வியர்வை கன்னம் வரை வழிந்த, நெற்றிப் பொட்டற்ற அந்தக் காலப்பகுதியில் சராசரி பெண்களின் இயல்பையோத்த அந்தப் பெண் மாவை குழைத்துக் கொண்டு ஒருமுறை அந்த மூலையை நோக்கி சிறு முறாய்ப்பு பார்வையை விட்டு மீண்டும் மாவை பிசைவதில் ஈடுபடுகிறாள். 

 கேமரா கோணம் இப்பொழுது அவள் முறைத்துப் பார்த்த அந்த மூலையை நோக்கி மாறுகிறது. அங்கே 7 வயது மதிக்கத்தக்க பள்ளிக்கூட நீலக்கால்சட்டை வெறும் மேலுடன் அந்த மெல்லிய தேகத்தைக்கொண்ட சிறுவன் குறுகிப்போய் கொட்டிலின் வளைக்கப்புடன் சாய்ந்து இருந்து தாயைப் பார்த்த வண்ணமே இருக்கிறான். 
உரையாடலற்ற இந்த இடைவெளி சற்று முன்னர் சம்பவம் ஏதோ நடந்துள்ளதை எம் ஊகத்திற்குவிட்டு காட்சி நகர்கிறது. இருவருக்கிடையிலான இந்த இடைவெளி மவுனத்தை மழையின் சத்தமும் இடியின் சத்தமும் இசையாய் நிரப்பிக் கொள்கின்றன. 

 இன்னொரு முறை அவன் முயற்சிக்கிறான்

 "அம்மா... குடை.." 

 மாவை கொத்திக் கொண்டிருந்தவள் அதை நிறுத்தி..
 " தம்பி சொல்லிப் போட்டன் இனி வாங்கப் போறாய்.. உனக்கு எதுக்கு இப்ப பெரிய குடை? " 

 பெரிய குடை என்பதில் அவள் பொருளாதார இயலாமை அமுங்கிப் போய் இருப்பது அவள் முகத்தின் குளோசப்பில் தெரிகிறது. வாடிய முகத்துடன் கண்கலங்கி சாய்ந்திருந்த அந்த சிறுவனின் பின்னிருந்த அந்த வளைக்காப்பின்வழியே நேர்கோட்டில் மேல்நோக்கி கேமரா பயணிக்கிறது. அந்த மரக்கப்பின் பாதியில் சிறு பலகைத்துண்டில் சட்டம் போட்டு அதில் சாய்த்து வைக்கப்பட்ட தந்தையின் போட்டோ, அருகில் சிறு விளக்குத்தீபம். போட்டோவில் வீரவணக்கம் இருபுறமும் பிறப்பு, வீரகாவியம் மற்றும் எல்லைப்படைவீரன் இளமாறன் என சிவப்பு எழுத்துக்கள்.

 "அம்மா குடை"
மீண்டும் அதே கெஞ்சல் குரல். 

 இயலாமை விளிம்பில் நிற்கும் அவள் தன் கணவனின் படத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வை கோணத்திலிருந்து கேமரா சூம் (soom) போய் அந்தப் படத்தில் இளமாறன் முகத்தில் நெருக்கமாய் நிற்கும். அந்த முகத்திலிருந்து பின்னணி காட்சி படர ஆரம்பிக்கும்.

 " நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலுமப்பா என்ர பிள்ளையை நான் கஷ்டப்படாமல் வளர்க்கோணும். அவன் ஆசைப்படுற எல்லாம் வாங்கி குடுக்கோணும். நான் வேற தொழில் செய்றத விட நாட்டை காக்கிற தொழில் செய்யிறது தான் எனக்கு சந்தோசம். அதனாலதான் நான் எல்லைப்படைக்கு போகப்போறேன். " 

 ### 

 அடுத்த காட்சி கிளிநொச்சி நகர் பிரதான வீதியில் நெருக்கமாக இருக்கும் வணிகக்கடை தொகுதியில் இருந்து ஆரம்பிக்கிறது. கிளிநகரின் அப்போதைய ஓர் உயரமான தனியார் கடையின் மேலிருந்து அந்த காட்சி இயல்பாக படமாக்கப்படுகிறது. இந்தப் பின்னணி இசையும் இல்லாமல் வாகன இரைச்சலும் சனங்களின் சத்தங்களினிடையே அவள் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குவதும் எதையோ வாங்கும் நோக்கமாக தேடுவதுமாக நகர்கிறது. 

 ஐநூறு ரூபாய்யக்கா.... 

 குறைக்கேலாதாண்ணை..... 

 ### 

 படலையை திறந்து கொண்டு உள்ளே வருகிறாள் கையில் அந்த குடை. எங்கோ விளையாடிக் கொண்டு நின்ற அந்த சிறுவன் தாயைக் கண்டதும் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடி வருகிறான். 

 " இதுக்குத்தானே அடம்பிடிச்சனீ...இந்தா..." 

 பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற பரிசு போல் ஆனந்தமும் வெட்கமும் கலந்து இரு கைகளாலும் வாங்கிக் கொள்கிறான். அவளும் அவனை ஆசையாக அள்ளி அணைத்து முத்தமிட்டு விட்டு அந்தக் குடிசைக்குள் குனிந்து நுழைகிறாள்.

 ### 

 இடியுடன் மழை பெய்ய ஆரம்பிக்கிறது.வீட்டினுள் நின்றவள் ஏதோ திடுக்குற்றவாளாய் "தம்பி எங்க போட்டான் முற்றத்தில் தானே விளையாடிக் கொண்டு நின்றவன். தாவாரத்தினால் எட்டிப்பார்த்து

 "தம்பி......மகிழன்......."உரத்து கூப்பிடுகிறாள். 

 ### 

 உடல் முழுவதும் தொப்பையாக நனைந்து கொண்டு கிரவல் கரைந்து ஓடும் அந்த வீதியில் கன்று தவறிய பசுவாக அவள் "மகிழன்... தம்பி.." 

 வீதியில் குடையுடன் போய்க் கொண்டிருந்த முதியவரிடம் ஐயா மகனை கண்டனிங்களே? இல்லை என்பது போல் அவர் தலையாட்டுகிறார். 

 மழை சோ வென பொழிகிறது. அவள் இடது பக்கமாக துயிலும் இல்லம் தோன்றுவதாக கேமராவின் திசையில் காட்சி நகரத் தொடங்குகிறது. வீதியை நோக்கிய நேர் பார்வையில் சென்றவள் நின்று திரும்பி அந்த பரந்து விரிந்த கல்லறை தோட்டத்தை பார்க்கிறாள். கல்லறை வரிசைகளின் தொலைவில் ஓர் கல்லறைக்கு அருகில் குடையுடன் ஒரு சிறுவன். கண்களை சுருக்கி உற்றுப் பார்க்கிறாள்.. அது மகிழன் தான். 

 மகிழன்....மகிழன்... மூச்சிறைக்க கத்தியபடி ஓடி வருகிறாள்... அவள் அருகில் வரும் வரை குடையுடன் தன் தந்தை கல்லறையின் அருகில் அமைதியாக நின்ற மகிழன் வேறு எதுவும் பேசாமல் மூச்சு வாங்கியபடி தொப்பையாக நனைந்து நின்ற தாயை திரும்பிப் பார்த்து

 "அம்மா, அப்பா பாவமில்லா மழைக்க நனையிறார்"

 எம் கண்கள் நனைக்கும் அதே இசைவுடன் மெல்லிய இசையும் சேர்ந்து கேமராவின் கண்கள் மூடுகிறது...

Sunday, June 4, 2017

கிணற்றுத் தவளை

2002. வரப்போகுதாம் வரப்போகுதாம் எண்டுகொண்டிருந்த A/L ரிசல்ட்டும் வந்திட்டு.எல்லாரும் ஆளாளுக்கு ஓடித்திரியிறாங்கள்.கொஞ்சப்பேர் கல்வித்திணைக்களப்பக்கம் ஓடுறாங்கள் கொஞ்சப்பேர் பள்ளிக்கூட அறிவித்தல் பலகைபாக்க ஓடுறாங்கள் அங்கயும் இல்லாட்டில் அதிபர் வீட்ட எண்டு முழுப்பேரும் 3A வந்திடும் ரிசல்ட்டை வாங்கிகொண்டு அப்பிடியே யூனிவசிற்றிக்கு ஓடிப்போய் வகுப்பில இடம்பிடிச்சிடோணும் கணக்கா பறக்கிறங்கள்.நான் முதலே இந்த மூண்டிடமும் ஓரு ரிப் ஓடிக்களைச்சுப்போய் இன்னும் பாசல் உடைக்கேலயாம் எண்ட பதிலில களைச்சுப்போய் வீட்டு விறாந்தையில கதிரையில இருந்தன்.அப்பதான் அதிபர் ரிசல்ட் பேப்பரை ரோட்டிலயே வாசிச்சுக்கொண்டு போனதில என்னுடய ரிசல்ட்டையும் கேட்டுக்கொண்டு மூச்சிறைக்க வந்தான் கடம்பசோதி..’’மச்சான் உனக்கு ரெண்டு பாடம் காலைத்தூக்கீட்டடா ’’
நாசமாய்போவான் வாயில வசம்பவைச்சு தேய்க்க..

சே...கோயில்களுக்கு வைச்ச நேத்தியெல்லாம் வீணாப்போட்டுதேடா....

’’உவன் பொய் சொல்லுறானே?..’’ மேல்மனது சுரண்டி விட்டது.

உள்மனதோ ...’’ எக்சாம் எப்பிடி எழுதினி எண்டு தெரியும் தானே மச்சி...ஐந்தொகை சமப்படல....நாலவது ஆறாவது கேள்விகள் என்னெவென்றே தெரியாது....கடசிக்கேள்வி செய்யேக்க தனுசியாவும் நானும் அந்திநேரம் அழகான மலைச்சாரலின் கீழ் ’’அழகானகாற்றுக்கும் அது தேடும் பூவுக்கும் காதலா காதலா பாட்டு போகேக்க எக்சாமினர் மேசையத்தட்டி பேப்பரை வாங்கிக்கொண்டு போனது...உனக்கு உது தாண்டா ரிசல்ட்...அடித்துச்சொன்னது.

உடம்பு புக் கெண்டு வேர்த்தது..
உள்ளுக்குள்ள நடுங்க தொடங்கியது....
வெட்கம்.. அவமானம்...
பெரிய கீறோ மாதிரி படிச்சு பில்டப் போட்டாயே...என் செய்வேன் என் செய்வேன்...என் குடும்பம் எப்படி வெளியால தலைகாட்டும்...காணுறவன் கண்டவன் எல்லாம் ரிசல்ட்டைக்கேப்பாங்களே....வெளிநாட்டில இருக்கிற மறந்த சொந்தங்கள் எல்லாம் மறக்காமல் கடிதம் எழுதி ரிசல்ட்டைக்கேப்பாங்களே...
யாழ்ப்பாணம் யூனிவசிற்றிக்கு அங்கால உலகம் இருக்குமா எனக்கு தெரியாது...என் டெனிம் ஜீன்ஸ் கனவுகள் காற்றில் பறந்தனவோ....ஐயகோ...
பத்துத்தரம் காதலைச்சொல்லியும் காறித்துப்பின அந்த சப்பபிகரும் என்னைக்கண்டால் கல்லால் அடிக்குமேடா...மூண்டு பாடம் இல்லாட்டி வருவாய்துறையில கூட கணக்கெழுதேலாதேடா...
பொங்கி வந்த கண்ணீர் காட்சிகளைக் தெளிவற்றதாக்கியது..
வானம் இருண்டது.....பூமி நடுங்கியது..
யூனிவசிற்றி எண்டர் பண்ணினவனைத் தவிர மற்ற எல்லாருக்கும் இந்த காட்சிய விளங்கப்படுத்த தேவையில்லை..

நெஞ்சுக்குள் தீயொன்று அனலாய் எழுந்தது.. பேசாமல் செத்துடுவமா? இனி எதற்கு வாழ்வு? முற்றத்தில் கிணறு மசகெண்ணை எடுக்குமளவு ஆழம் தோண்டியும் தண்ணியில்லாமல் எனக்காக காத்துக்கிடந்தது.. செத்தாலும் இந்த காணிக்க தாண்டா சாகோணும் மனமும் சிபாரிசு பண்ணியது...மாடு பாஞ்சாலும் எண்டு உயத்திக்கட்டின கிணத்துக் கட்டில, கப்பிக் கப்புக்கு போட்ட பூவரசில பிடிச்சுக்கொண்டு உன்னி ஒருகாலை கிணத்துக்கட்டில போட்டன். உடன செத்திடனும்..இதிலயாவது சிறப்பு சித்திகிடைக்கோணும் சித்திவிநாயகா....

தனுசியா, சுமதி, ஆரபி,குமுதா ...இந்தப்பிறவியில ஒண்டு சேராட்டியும் அடுத்த பிறவியிலாவது சேரணும்...அடுத்த காலையும் தூக்கிப்போட்டேன்.கண்களை இறுக்க மூடிக்கொண்டு..
வண்......
ரூ...

விழ விழ எழு எழு
நட நட இனி ஒரு பகை வர
பொடிபட நட நட

ஆட்டோவில ரெண்டு தடியக்கட்டி அதில ஸ்பீக்கர வச்சு அரசியல்துறைக்காறர் ஏதோ அறிவிப்புச்செய்ய எங்கட வீட்டுகேற்றடியில நிண்டுகொண்டு பாட்டு..

திக் கென்றது.ஏதோ சரியாப் படல.தற்கொலை கான்சல்.
வலதுபக்க மூளை: பேசாமல் இயக்கத்துக்கு போவமே?
இடதுபக்க மூளை : சமாதனம் வரப்போகுது.இனி சண்டையும் இல்லை.ராங்கும் கிடைக்காது கடைசிவரை வீரவேங்கையாகத்தான் இருக்கணும் உனக்கு ஓகேயா ..

விறு விறு என திரும்ப நடந்து வந்து மீண்டும் கதிரையில் இருந்து கொண்டேன்.

மயக்கனிலை..மாயனிலை...சூனியனிலை....ஏதும் அறியாப்பாலகனாய் கூதலுக்கு சுறுண்டு படுக்கும் நாயாய் கதிரையில் சுறுண்டு கொண்டேன்.

மச்சான் கீரன் ஓல்சிலோன்ல செக்கண்ட் ராங்காம் ரோட்டால ஒருத்தன் கத்திக்கொண்டே போனான்..

* * * *
இதயம் இயங்க ரத்தம் வழங்கிறது முடியுரு நாடி..அதில கொழுப்பு கொஞ்சம் கொஞ்சமாய் படிஞ்சு ஒருகட்டத்தில குருதி விநியோகம் இல்லாமல் போகும் போது இதயம் தனது செயற்பாட்டை செய்யமுடியாமல் போக திண்டாடும் இதத்தான் காட்டராக் என்பினம்.இந்நிலை வரும்போது நரகவலி ஏற்படும்.அவ்வலியை தாங்கமுடியாத மூளை தன் உணர்வாற்றலை நிறுத்திக்கொள்ளும்...மயக்கநிலைக்குப் போகும்

* * * *
அந்த நிலைதான் எனக்கும் ஏற்பட்டது. என்னது கீரன் ஓல்சிலோன் செக்கண்ட் ராங்கா..
பைனல் எக்ஸ்சாமுக்கு ஒருகிழமைக்கு முந்திதான் ஒற்றைப்பதிவே படிக்க வெளிக்கிட்டான்...இதுதான் பிறக்கும் போதே மூளையோட பிறக்கோணும் எண்டுறது..

நெஞ்சு வலி இடியாக மாறியது
நினைவுகள் மின்னலென வெட்டியது
கோவம், அவமானம் மேகமென ஒடுங்கியது- அது
இலச்சிய வெறியாக மாறி மழையாக கொட்ட ஆரம்பித்தது.

துள்ளி எழுந்தேன்.சாரத்தை மடித்துக்கட்டி காலை உயர்த்தி தொடையில் தட்டி சபதம் போட்டுக்கொண்டேன்
‘’ டேய் எடியுகேசன் டிப்பாற்மென்ருகாரங்களா இந்த நாளை கலண்டரில் குறிச்சு வச்சுக்கோ அடுத்தவருசம் இதே மாதம் இதே நாள் 3A எடுத்து மெரிட்டில கம்பஸ்ல கால எடுத்துவைக்கல...அது வரைக்கும் கிளிநொச்சிப்பக்கம் திரும்பிப்பாக்கிறதில்லை...இண்டையில இருந்து என் படிப்பு லெவலே வேற..என் அறிவு தாகத்துக்கு தண்ணி தரக்கூடிய ஒரே இடம் யாழ்ப்பாணம் கன்னாதிட்டி...
கட்டுறா வண்டிய..

….......
சைக்கிள் கரியரில துணிமணி, இவ்வளவு நாளும் தொட்டே பாக்காத பாஸ்பேப்பர் புத்தகங்கள் பஞ்சத்தில அடிபட்டவன் போல எழுதிற சிறுகுறிப்பு பேப்பர் கட்டுக்கள் எல்லாத்தையும் உரப்பையில கட்டி முக்கியமா போக்குவரத்து கண்காணிப்பு பிரிவின்ர வழியனுமதித் துண்டையும் எடுத்துக்கொண்டு...
சிங்கம் ஒண்டு புறப்பட்டதே அதுக்கு நல்ல காலம் பொறந்திடுச்சு நேரம் பொறந்திடுச்சு...

…......

பரந்தன் சந்தி தாண்டி கெமிக்கலடி வரேக்க சிங்கம் புறப்பட்ட வேகம் சவ்விளுக்கத்தொடங்கியது. இருந்தும் இலச்சிய நெருப்பு சுமந்ததினால் வெய்யில் வேர்வை எதிர்க்காத்து எதுவும் தெரியாமல் போய்க்கொண்டிருந்தது. கான்ரில்ல சைக்கிள் ரேஸ்காரர் மாதிரி கவிண்டுகொண்டு ஓடினதில ஆனையிறவு வந்தது தெரியல.அந்த முடக்கில திரும்பத்தான் முன்னுக்கு போய்க்கொண்டிருந்த சைக்கிள் குத்தி கால் பிரேக் போட்டு நிண்டது.நானும் சடின் பிறேக் போட்டு நிமிந்து பாத்தா நம்ம புவிராசலிங்கம்..டேய் புவி எண்டுகொண்டு பாத்தால் அவன் ரெண்டு உரப்பை கட்டிக்கொண்டு வாறான்.

புவி : என்ன மச்சான் லேற்..எனக்கு முதலே உனக்கு ரிசல்ட் தெரிஞ்சிற்றில்லே
நக்கல்ல்ல்

’’பாவி இவனுக்கும் ஆரோ பாட்டுபோட்டு குழப்பிப்போட்டாங்கள் போல’’

என் இலச்சிய குறியில் இவனும் ஒரு போட்டியா வரப்போறானே எண்டு நினைச்சாலும் பறுவாயில்ல இம்முறை என் படிப்பு லெவலே வேற.இவனெல்லாம்    ஜு ஜுப்பி

டபிள் போட்டுக்கொண்டே இருவரும் மிதித்தோம்..

முகமாலை தகவல் கொட்டிலுக்க போனா சுதாவும் நிசாந்தனும். டேய் எப்படா வெளிக்கிட்டீங்க?

நாங்க போன கிழமையே வெளிக்கிட்டம்.இண்டைக்கு தலகாணி பாய் எடுக்க வந்தனாங்கள்.
டேய் மொத்த ஊரும் முன்னுக்கே கிழம்பிருச்சா..நாம தான் லேற்றா???

…...

இயக்கத்தின்ர சோதனைச்சாவடி போமுகள் எல்லம் நிரப்பி மீள்திரும்புகை எண்ட இடத்தில கம்பஸ் என்ரபண்ணினால் மட்டும் எண்டு நம்பிக்கையுடன் எழுதிப்போட்டு ,ஆமின்ர செக்பொயிண்ட் செக்கிங் முடிச்சு தாண்டினால் யாழ்ப்பாணம் ரோசா பஸ்கார் வாங்கோ வாங்கோ வெளிக்கிடப்போகுது எண்ட கத்தில மயங்கி, மச்சான் சினிமா பாட்டு கேட்டு கொண்டு பம்பலா போகலம் எண்ட முடிவில சைக்கிள் சாமான் எல்லாத்தையும் மேல ஏத்திப்போட்டு உள்ளுக்க போய் இடம்பிடிச்சம்.

...........

எண்பது அடிக்கொட்டில் நாலு.  நிலத்துக்கு சீமேந்து போட்டு இடைக்கிடை பான்(Fan) லைட் போட்டு புறவெட்டில வாங்கு மேசை ...யாழ்ப்பாணத்தாருக்குரிய பணக்காரத்திமிருடன் யாழ்.பொருளியல் கல்லூரி. ப்பா... கண்ணைகைபுரம் அ.த.கா தோத்துப் போகும்.பின்ன உதயனில அரைப்பக்க விளம்பரம் வலம்புரியில அரைப்பக்க விளம்பரம் தினமும் வாறதுக்கு ஒரு முகாந்திரம் இருக்கவேணுமா இல்லையா. 500 க்கு அட்மிசன் பீஸ் கட்டினாதான் உள்ள விடுவன் எண்டு கத்திய காட்டினான் செக்கி...A/L மூண்டு வருசமும் சத்தியசீலன் சேரிட்ட காசுகட்டாமல் ஏமாத்தினத்துக்கு வசமா மாட்டிக்கொண்டோம். அதுவும்  நாங்கள் கிளிநொச்சிப் பெடியள் எண்டு சொல்ல கத்திய வைச்சிட்டு தன் இடுப்பில அவன் ஏதையோதேட எதுக்கு வம்பெண்டு சலண்டர் ஆனோம்....பின்வாங்கார் பின் வாங்கார் எண்டு ஏதோ ஒரு பக்கி சொன்ன வாசகத்த  நம்பி பின்வாங்கு அத்தனையையும்  நம்ம உரப்பை செட் மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டோம்..பிறகுதான் தெரிஞ்சுது கரும்பலகையில எழுதிற எதுவும் கடைசி வரை ஒருத்தருக்கும் தெரியேல்ல எண்டு.


குடுத்த காசுக்கு குறைவில்லாமல் கரெக்ட் டைமுக்கு அந்த உருவம் வகுப்புக்க எண்டர். த கிங் ஆப் எக்கனாமிக்ஸ் வரதராஜன். விவேக் போய் அப்பதான் வடிவேல் பிரசித்திபெற்றுக் கொண்டிரு ந்த காலம். சட்டெண்டு பாக்க நம்மாள் தான் இங்க மாறி வ ந்துட்டாரா எண்ட மாதிரி இருந்திச்சு . கையில சோக்பீஸ் எங்க தவறி விழுவ்திடுவமோ எண்டு  நிலத்த பார்த்த படியே தொங்கித் தொங்கி அந்தபக்கமும் இந்தபக்கமும் ஒரு  நடை.குந்தியிருக்கிற 200 பேரில ஆரைப்பாத்துத்தான் மனுசன் வகுப்பெடுக்கிறது. அதால போத்தம் போதுவா மனுசன்  நிலத்தப்பாத்தே வகுப்பெடுக்க பழகீட்டார் போல. என்னமச்சான் எனக்கு விளங்கல சுதாவின் காதில் மெல்லக்கடித்தேன்..மச்சான் ஆள்தான் தமிழீழ பொருளியல் அறிஞ்ஞர். தலைவருக்கே ஆள்தான் பொருளாதரம் விளங்கப்படுத்துவராம் எண்டா பாரன் எண்டு ஒரு கொசுறுச்செய்திய வேறு எடுத்துவிட்டான்.ஆளிட்ட படிச்சா பொருளியல் A தான் எண்டு வேற குழையடிச்சு விட்டான். நிமி ந்து பார்த்தால் வரதராஜன் சேருக்கு பின்னால ஒரு ஒளிவட்டம். சாட்சாத் அந்த கிருஸ்ணபகவானே தான்...

........

வகுப்பில உச்சக்கட்டம்  நாம் வாய்பிளந்து இதெல்லாம் பாடத்திட்டத்தில சேத்துட்டாங்களா கணக்கா குந்தியிருக்க ஒரு கேள்விய போட்டார் சேர்..

ஜரோப்பியன் ச ந்தை பங்கு சுட்டியில் ஏற்படும் மாற்றம் வட்டிஸ் எபக்ட் ரு த ஸ்ரீலங்ககன் சேயார் கோல்டர்ஸ்

தகரவெக்கையில  மைக்கிரோ தூக்கம்போட்ட சுமன் ஏதோ இங்கிலீசு படமாக்குமெண்டு திடுக்கிட்டு போய் இருந்தான். முழிச்சுக்கொண்டிருந்த  நிசாந்தன் ஏதோ  நோட்ஸ்தான் சொல்லுறார் எண்டு எழுத ஆரம்பித்தான். நம்மபாடோ எக்சாமில சொய்ஸ்ல விட்டிடலாம் எண்டு தீர்மானம்  நிறைவேற்றி அமைதியாக இருந்தேன். நம்ம சங்க உறுப்பினர்களோ மகி ந்த ஆட்சி எதிர்க்கட்சி போல அரவமில்லாமலே இருந்தார்கள். அப்பதான் அ ந்த அதிசயம் முன்வாங்கில இரு ந்து யாழ்ப்பாணம் ஒண்டு தமிழும் ஆங்கிலமும் கலந்து கட்டி அந்த விடைய சொல்லிக்கொண்டிருக்கவே உவந்தாண்டா அடுத்த ஓல் சிலொன் பெஸ்ட். ராங்க் பண்ணிக்கொண்டோம்.

கொஞ்ச  நேரம் துள்ளித்துள்ளி கேட்டுக்கொண்டிருந்த வரதராஜன் சேர் நக்கல் சிரிப்போண்டொட சொன்னார் நீங்க எல்லாம் கிணத்து தவளையள் எண்டு
  நம்மாளு ஒருத்தன் உசாரா எழும்பிச்சொன்னான் சேர் யாழ்ப்பாணப் பெடியள் கிணத்து தவளை எண்டா அப்ப நாங்கள் எல்லாம் என்ன குழாய்க்கிணத்து
 தவளைகளா?


தமிழீழப் பொருளாதாரமே ஒருகணம் ஆடிப்போய்  நின்றது.....